IJ
IJCRM
International Journal of Contemporary Research in Multidisciplinary
ISSN: 2583-7397
Open Access • Peer Reviewed
Impact Factor: 5.67

International Journal of Contemporary Research In Multidisciplinary, 2026;5(1):417-420

கலைச்சொல்லாக்கமும் அறிவியல் தமிழ்ப் படைப்பாக்கமும்

Author Name: முனைவர். ஈஸ்வரன் க.;  

1. உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்பத்தூர்.தமிழ்நாடு, இந்தியா

Abstract

இன்றைக்கு ‘எங்கும் எதிலும் அறிவியல்’ என்ற முழக்கம் உயர்ந்தோங்கி வருகின்றது. உலக வாழ்வில் அனைத்துமே அறிவியல் துறைகளுக்கு உட்பட்டவை.

கணிதம், இயற்பியல், வேதியியல், விண்வெளி சார்ந்த வானவியல், புவி சார்ந்த துறைகள், உயிரினங்கள் சார்ந்த உயிரியல் ஆகிய 6 பெரும்பிரிவுகளும் அறிவியல்பாற்படும். ஆயின், ஏழாவதாக மானுடவியல், புள்ளி விவரவியல், மொழியியல், அரசியல், சட்டவியல் போன்றவை யாவும் பொதுவாக சமூகவியல் பிரிவுகள் ஆகும். மொழி என்பது ஓர் இன மக்களின் கலை, இலக்கியம், நாகரிகம், பண்பாடு போன்றவற்றைப் பிரதிலிக்கும் காலக் கண்ணாடி! அதன் எழுத்து வடிவம் கால வெள்ளத்தினால் உருமாறினும், அந்தந்தக் காலக்கட்டத்தில் அம்மொழி தன்னகமாக்கிக் கொண்டுள்ள சொற்களஞ்சியம் மட்டும் என்றென்றும் அழியாதது. இத்தகைய அறிவியல் எவ்வாறு தமிழ் எழுதுவதிலும் படைப்பதிலும் தன்னை நிலை நிருத்தியுள்ளது என்பதே இவ்வாய்வுக்கட்டுரை விளக்குகின்றது.

Keywords

கணிதம், இயற்பியல், வேதியியல், விண்வெளி, வானவியல், புவி சார்ந்த துறைகள், உயிரியல், மானுடவியல், புள்ளி விவரவியல்.